செவ்வாய், 9 ஜூன், 2009

அவள் அப்படித்தான்!" (4)


எங்கேயோ சந்தித்தோம் நம்மைப்பற்றி
எப்படியோ சிந்தித்தோம்!பாடுகின்ற
சங்கீதப் பறவைகளாய் வாழ்ந்தோம் பின்னர்
சரித்திரத்தின் பக்கங்களாய்ப் புரட்டப்பட்டோம்!
இங்கேதான் இங்கேதான் இந்த மண்ணில்
இருக்கின்றோம் இன்றைக்கும்!எனினும் என்றன்
சிங்காரத் தேன்குயிலே நீயும் நானும்
திசைமாறிப் போய்விட்டோம் பிரிந்துவிட்டோம்!

.......கவிஞர் மு மேத்தா


அப்படியே ஸ்தம்பித்து நின்றவளைத்
தாங்கிப்பிடித்தபடி பார்க்கையில்...
அங்கு வஸந்த் நின்று கொண்டிருந்தான்!
"வஸந்த் ப்பிளீஸ் பிறிங் தி வாட்டர் குவிக்!" என்று
கத்தினாள்!

வஸந்த் ஓடிச்சென்று இரண்டு கைகளிலும்
தண்ணீரை ஏந்திவந்து நித்தியாவின் முகத்தில் தெளித்தான்!
வெயர்த்திருந்த அவள் முகத்தில் தண்ணீர்பட்டவுடன்
நித்தியா சற்று கண்களை விழித்துப்பார்க்க எத்தனித்தாள்!
தனக்குள் ஏதேதோ முணுமுணுத்தாள்!

அருணாவுக்கு ஒன்றும் புரியவில்லை...
பக்கத்தில் இருந்த மரத்தடிக்கு மெதுவாக
தாங்கிப்பிடித்தபடி அவளை இழுத்துச் சென்று
தன்மடியில் படுக்கவைத்து தன் கைகளால்
அவளின் முகத்தை வருடித் தலையை
கோதிவிட்டுக்கொண்டிருந்தாள்!

இதற்கிடையில் அங்கு பெரிய கூட்டமே கூடிவிட்டது!
"வாட் ஹப்பிண்ட் அருணா!" என்று அங்கிருந்த
பலகுரல்களின் ஏகோபித்த சத்தம்!
அவளுக்கு என்ன பதில் சொல்வதென்று
தெரியவில்லை! அவளுக்கே தெரிந்திராதபோது அவள்
என்ன சொல்வாள்!

சற்றுநேரத்திற்கெல்லாம் நித்தியா
கண்களை மெல்லத்திறந்தாள்!
தன்னைச் சுற்றிலும் ஒரே கூட்டம்!
"என்ன நடந்தது" தனக்கு
என்று அவளால் சட்டென்று உணரமுடியவில்லை!

அருணாவின் மடியில்
தான் படுத்திருப்பதை உணர்ந்து
கொண்டதும் சட்டென்று எழுந்து கொண்டாள்!
அவள் எழுந்ததும் சூழ நின்ற கூட்டம் சற்று
விலகிக்கொள்ள "என்ன நடந்தது அருணா!" என்று
மிகவும் பதட்டமாக கேட்டாள்!

"ஒன்றுமில்லை நித்தியா!
சட்டென்று மயக்கம்போட்டு விழப்பார்த்தீங்க!
நான் உங்களைத் தாங்கிப்பிடித்திட்டேன்!
வேறு ஒன்றுமில்லை!" என்றாள் அவள்!

நித்தியா சற்று மெல்ல மெல்ல
நிதானத்திற்கு வந்தவளாய்....
'யார் அவன்! யார் அவன்!....
அவன் ஏன் என்னைத்தொடரவேணும்!
என்ன காரணம்! அவன் எங்கே....அவன் எங்கே"....என்று
அந்தக்கூட்டத்தில் தன்கண்ணில் பட்டவனைத்தேடினாள்!

சற்று தொலைவில்
அவன் நடந்துபோவதை அவளால்
பார்க்க முடிந்தது! அவளின் கேள்வி அவளுக்குள்ளே
தொடர்ந்து ஒலித்தவண்ணமே இருந்தது!

அன்று காலையில் வழிமறித்த அதே அவன்தான்....
தன் பெயர்கூறி அழைத்த அதே அவன்தான்....
"யார் அவன்....யார் அவன்"...என்ற சிந்தனைக்குள்
மூழ்குகையில்....

"நித்தியா! வாட்ஸ் றோங் வித் யூ!
ஹெடேக்"...என்று பரிவோடு வருடியபடி கேட்ட
அருணாவிற்கு சட்டென்று நித்தியாவால் பதில்
சொல்ல முடியவில்லை!....

"ஒன்றுமில்லை.....சற்றுத் தலைப்பாரமாக இருக்கிறது!
அவ்வளவுதான்...வேறொன்றுமில்லை!" என்று
மறைத்துக் கொண்டாள்....

"உவைய்...ஐஸ்கிறீம் ஒத்துவரல்லையா நித்தியா...
ஐ திங் யூ நீட் றெஸ்ற்....ப்பிளீஸ்...கமோன்..."
என்று தன்னோடு தாங்கியபடி மெதுவாக
அவளை அழைத்துச்சென்று கன்டீனில் இருக்கவைத்து
கோப்பி வாங்கிக் கொடுத்தாள்....

"அருணா! நன்றி அருணா! தாங்யூ வெரிமச்....
உங்கள் அன்பு என்னை எங்கோ அழைத்துச்செல்கிறது!
என் அம்மா இருந்தால் இப்படி இருந்திருப்பாவோ..
எனக்குச்சொல்லத் தெரியல்லை! ஆனால்
எனக்குப் புதுமையாகவும் மகிழ்ச்சியாகவும்
இருக்கு அருணா! இது என்றும் நிலைத்திருக்கவேண்டும் அருணா!"

"நித்தியா ப்பிளீஸ்....
என்றும் இது நிலைக்கும் டோன்ற் வொறி!
ஆர் யூ ஓகே...நௌவ்!" என்று அன்போடு
அவள் தலையை வருடினாள்!

என்ன நினைத்தாளோ...
சட்டென்று அவளைக் கட்டிப்பிடித்து
நெற்றியில் முத்தமிட்டாள்! கண்களில் நீர்ப்பெருக்கெடுத்தது!
நித்தியாவின் கண்கள் மட்டுமல்ல!
அருணாவின் கண்களும்
அதே நிலைதான்.....

நிஜமான உணர்வுகளின் அன்புப் பரிமாற்றமே அதுதானே......

இருவரும் அன்பின் பிணைப்பின் நெருக்கத்திளைப்பில் இருக்க
அந்த நேரமாய் வசந்த் அந்தக்கன்டீனில் உள் நுழைந்தான்....

"அவள் அப்படித்தான்!"

(வளர்வாள்)

அன்புடன்
ஆதித்ததாஸன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக