செவ்வாய், 9 ஜூன், 2009

"அவள் அப்படித்தான்!" (5)


ஒரு குறுகலான பாலம்!
நன்றாகக் குளித்துவிட்டு
நெற்றியில் வீபூதிப் பூச்சோடு
அந்தப்பாலத்தில் வந்துகொண்டிருக்கிறது ஒரு யானை!
எதிரிலே அசிங்கமாக வந்து கொண்டிருக்கிறது ஒரு பன்றி!

பன்றி வாலை ஆட்டிக்கொண்டு
கம்பீரமாக வருகின்ற வேகத்தில்
சக்திவாய்ந்த யானைக்கு கோபம் வரவில்லை!
அது ஒதுங்கிநின்று வழி விடுகிறது!

பன்றிக்கோ தான் வெற்றி பெற்றுவிட்டதாக நினைவு!
யானையே தனக்குப்பயந்து விட்டதாக ஒரு கனவு!
ஆனால் யானையினுடைய நினைவோ
"பாவம் பன்றி விட்டுவிடுவோம்" என்பதாகும்!

------ கிருபானந்தவாரியார்------(அர்த்தமுள்ள இந்துமதம் கண்ணதாஸன்)
அந்தக் கன்டீனுக்குள் வஸந்த் நுழைந்ததும்......
அவனை முதலில் கண்டவள் அருணாதான்!

"வா! வஸந்த் வா!
நித்தியா! வஸந்த்!
இவர்தான் நீ மயங்கி விழுந்தபோது தண்ணீர்
எடுத்துவந்து உன் மயக்கம் தெளிவித்தவர்!
வஸந்த்! நித்தியா! மை கிளாஸ்மேட்!"

"ஓ யேஸ்! ஐ நோ ஹெர்! "...

"யேஸ் நித்தியா! ஐ நோ யூ!
பட் யூ டோன்ற் நோ எபவுற் மீ!'

"வட் எ சர்ப்பிறைஸ் வஸந்த்!
யூ நோ ஹெர்...
ஸோ.. வை டிட் யூ லீவ் வ்வுறம் ஹெர் ஒன் தற் ரைம்."..

"ஸொறி அருணா!
ஐ ஹாட் ரு டூ ஸம்திங்! தற்ஸ்வை!"

"ஓ! றியலி! எனிவே நித்தியா!
யூ றியலி அண்லக்கி வ்வெலோ!
இனி ஓரே அறுவைதான் உங்களுக்கு நித்தியா!
வஸந்த்தோடை பேச ஆரம்பிச்சுட்டீங்கள்னா அவ்வளவுதான்!

என்ன வஸந்த்!
ஆம் ஐ றைற்!"...
.என்று சொல்லிச் சிரித்தாள் அருணா!

நித்தியாவுக்கு
'என்ன நடக்கிறது' என்று ஒன்றுமே புரியவில்லை!
'இவன் என்னைத் தெரியும் என்கிறான்!
அவளோ என்னைக்கிண்டல் பண்ணுகிறாள்!
என்ன நடக்கிறது இறைவா இங்கே!'

'இவன் பறட்டைத்தலையும் தாடியும்
அசல் றைளடியாகக் காட்டுது!
அதைவிடச் விஷமச்சிரிப்புவேறை
அடிவயிற்றைக்கலக்குது!

அதைவிட அருணா பேச்சுவேற
இவனைப்பற்றிக் கிண்டலாக இருக்குது!
என்ன இறைவா!
சோதனைகளுக்கு முடிவு வரும்!
விடியலைக் காட்டும்! என்று
நம்பிக்கையோடு கல்லூரிக்கு வர.....

சோதனைகளின் தொடர்வு தொடரும்!
என்றல்லவா நிகழ்வு காட்டுகிறது!
அம்மா! எனக்கு ஒன்றுமே புரியவில்லை!
நீதான் அம்மா எனக்கு வழிகாட்டு!'
என்று சிந்தனையில் ஆழ்ந்தவளை.....

"என்ன நித்தியா!
ஒரு தாங்ஸ்கூடக் கிடையாதா!" என்று
அவள் உடலைக் கண்கள் விழுங்க
வார்த்தைகளில் விஷமம் வளர்த்தான் அவன்!

"ஓ! தாங்ஸ்! ஸொறி!" என்றாள் அவள்!

"என்ன...
தாங்ஸ்ஸோடை ஸொறியும் சேர்ந்துவருகுதே!
கொஞ்சம் ஹப்பியாகச் சொல்லக்கூடாதா...
ஏதோ வேண்டப்படாதவனைப் பார்த்தமாதிரியல்லோ
உங்கள் முகம் காட்டுகிறது!
என்னைப்பார்க்கிற எல்லோருக்கும்
அப்படித்தான் தெரியுது!
அருணாவைத்தவிர....

எனிவே யூ ஆர் லக்கி!
யூ ஹாவ் அருணாஸ் வ்றெண்ஸிப்!
ஹீப்பிற்றப்..ஹீப்பிற்றப்!"...என்றான்!....

'இவன் என்னை நிஜமாக வாழ்த்துகிறானா!
இல்லை வைகிறானா...
ஒன்றுமே புரியவில்லையே!
அப்பா நீங்கள் சொன்னதுபோல்
இந்தக்கல்லூரிக்கு வந்தது தப்போ அப்பா.'..

என்று தன்தந்தையை
மனதாரக் கேட்டுக்கொண்டாள்!

'நான் நல்லதைத்தானப்பா நினைக்கிறேன்!
எனக்கு ஏனப்பா இப்படிநடக்கிறது!
பிறந்தபோது அம்மாவை இழந்தவள்!
பிறப்பிலேயே நான் அதிர்ஷ்டம் இல்லாதளாய்
ஆகிவிட்டேனே அப்பா!

அருணாவைச்சந்தித்த மகிழ்ச்சியும்
இவனைச் சந்தித்த கணத்தில்
தொலைந்துபோய்விட்டதே...
எனக்காக கடவுளை வேண்டிக்கொள்ளுங்கப்பா!'
என்று மனதார மன்றாடினாள் அவள்....

"பை த வே வஸந்த்!
நித்தியாவை எப்படி உங்களுக்குத் தெரியும்
என்று சொல்லவில்லையே."..என்று அருணா கேட்கவும்...

"தற்ஸ் ஸஸ்பென்ஸ் அருணா...
வெயிட் ற்றில் கிளைமேக்ஸ்."...

"வாட்! இற்ஸ் எ வ்விலிம் ஸ்ரோறி....
அதுகூட வ்வில்ம் ஸ்ராட்டிலேயே
தெரிந்திடுமே...இது என்ன ஸஸ்பென்ஸ் வஸந்த்!"

"யேஸ் அருணா!
ஐ கான்ட்ற் ற்றெல் நௌவ்!ஸொறி."..
என்றான் அவன்!

நித்தியாவுக்கு அடிவயிறு கலக்கியது!
ஓர் இனம்புரியாத பயம் கௌவ
"அருணா பாத்றூம் எங்கே இருக்கிறது!"என்று கேட்டாள்!

அவள் நிலையைப் பார்க்க
அருணாவுக்கும் பதட்டமாக இருந்தது!
"என்ன நித்தியா! எனிஹெல்ப்."..என்றுகேட்டாள்!
வேண்டாம் அருணா! ஜஸ்ட்....

"ஓகே! ஓகே!..அதோ அங்கே
றைட்டில திரும்பி லெவ்ற்றில இருக்கு!" என்று
கைகாட்டினாள்!....

நித்தியா சென்றதும்.....
"வஸந்த் ற்ரெல் ப்பிளீஸ்!
கைள டூ யூ நோ நித்தியா!
யூ ஆர் எனி றிலேஸன்ஸ்!"...

"நோ வே அருணா!
ஐ கான்ட்ற் ரெல் நௌவ்!
ஸொறி...எனக்கு ரைமாச்சு!
ஸீ யூ லேட்டர்.".
.என்று விரைவாக கிளம்பினான் அவன்...

'என்னது!
இவன் இப்படி சர்ப்பிறைஸ் பண்ணுறானே!'...
என்று குளம்புகையில்
நித்தியாவின் நினைப்பு வர...

'என்ன இன்னும் காணோமே...
பாத்றூம்போன நித்தியாக்கு என்னாச்சு..'
என்று எண்ணியவாறு விரைந்து சென்று கதவைத்தட்டினாள்!

சத்தத்தைக்காணோம்...
பலமாகத்தட்டினாள்..சத்தமில்லை!...
கத்தினாள்! "ப்பிளீஸ் ஓடிவாங்கோ."...
என்று பலமாகக்கத்தினாள்!..

அவள் கத்தலைக் கேட்டு
கண்டீன் ஆள் ஓருவன் ஓடிவந்தான்!..

வந்தவன் நிலைமை தெரிந்து
காலால் ஓங்கி ஓர் உதைவிட....
கதவு உடைந்து திறந்துகொண்டது! ..
அங்கு நித்தியா உடல்வெயர்த்து மயக்கமாய்க் கிடந்தாள்...

"அவள் அப்படித்தான்!" தொடர்வாள்!

அன்புடன்
ஆதித்ததாஸன்
பி.கு
(கதையில் இடம்பெறும் பாத்திரங்களின் பெயர்கள் யாவும் கற்பனையே!
கதை நிஜ நிழல் இணைந்தவையே! கதை என்றால் ஜதார்த்தங்களுடன்
கற்பனையும் இணைந்திருக்கவேண்டும் என்பது என் எண்ணம்!)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக