செவ்வாய், 9 ஜூன், 2009

அவள் அப்படித்தான்!" (7)


எங்கே வாழ்க்கை தொடங்கும்!அது
எங்கே எவ்விதம் முடியும்!
இதுதான் பாதை!இதுதான் பயணம்!
என்பது யாருக்கும் தெரியாது!

பாதையெலாம் மாறிவரும்!
பயணம் முடிந்துவிடும்!
மாறுவதைப் புரிந்துகொண்டால்
மயக்கம் தெளிந்துவிடும்!

----------------கவியரசு கண்ணதாஸன்....
அந்தக் குரலைக் கேட்டதும்...
அத்தனை கண்களும் ஆச்சரியத்தில்....

சட்டென்று பாய்ந்துசென்று
அவள் கைகளைப்பற்றிக் கொண்டு
கண்களில் நீர் நிறைந்த வழிந்தோட..
வார்த்தைகள் தட்டுத்தடுமாறிட...

தாய்மையின் கனிவோடு தழுவி
அணைத்துக்கொண்டது அந்தத் தந்தை உள்ளம்!

தன் கண்களையே நம்ப முடியாது
ஆச்சரியத்தோடு அசையாமல்...
'நடப்பது கனவா....நனவா.'..என்ற நிலைபுரியாது
குளம்பி நின்ற டாக்டர் காண்டீபனைக்
கேள்விக்குறியோடு பார்த்துக்கொண்டிருந்தாள் நர்ஸ் சித்திரா!

'இப்படியும் நடக்குமா.'...
'எப்படி...எப்படி.'...
'இனிக் கண்கள் திறப்பதற்கோ...
உதடு திறந்து பேசுவதற்கோ...
சந்தர்ப்பம் இல்லாதவள்.'...

'அதையும் தாண்டி...
"இல்லாதது."...என்று சொல்லும் வண்ணம்...
இருக்கவேண்டிய அவளின் நிலையில்
இப்படி ஒரு மாற்றமா!...

'விஞ்ஞானம் கரைகண்ட
இருபத்தோராம் நூற்றாண்டில்....
இப்படி ஒரு அதிசயமா.'...

பகுத்தறிவு மேதைகள்
'தாங்களே சிருஷ்டிகர்த்தாக்கள்!' என்று
உலகத்தைப் பார்த்து
எகத்தாளமாக நடைபோடுகையில்...
இப்படி ஒரு அதிசயமா.'...

காண்டீபனுக்குக்கூட...
கடவுள் நம்பிக்கை தள்ளாடிய நிலையில்...
'கடவுள் இருக்கிறானா...இல்லையா.'..
என்பதில் 'இல்லை' என்கிறவரைக்கு
ஊர்ஜிதமாய்க்கூறுகின்ற வரையில் இல்லாவிட்டாலும்...

தொண்ணூற்றொன்பது புள்ளி ஒன்பது ஒன்பது வீதம்...
'இல்லை.'..என்ற முடிவுக்கு மனதில் வேரூன்றிவிட்ட
கடவுள்வாதக்கொள்கையில்.....

'நித்தியா.....அவள் முடிவு நிட்சயமாகிய
அசைக்கமுடியாத நம்பிக்கைக்கு...
இடியா...இல்லை மீளாய்வுக்கு வழியா...என்று
சொல்கிற நிலையில்...
இப்படி ஒரு திருப்பமா.'....

ஆச்சரியத்தோடு அசையாது நின்றவனை..
"டாக்டர்."..என்ற நர்ஸ் சித்திராவின் குரல்
சுயநிலைக்கு கொண்டுவந்தது!

தந்தையின் பாசப்பிடிக்குள் கட்டுண்ட நிலையில்
இருந்த நித்தியாவை.....

"நீங்கள் மறுபிறவி எடுத்திருக்கிறீர்கள் நித்தியா!
நம்பமுடியாமல் இருக்கிறது நீங்கள் பேசுவது...
அப்பாவின் அன்பு உங்களைக்காப்பாற்றியிருக்கிறது நித்தியா...
அதைவிட வேறொன்றும் சொல்லத்தெரியவில்லை"....

அவள் கையைப்பிடித்துப் பள்ஸைப் பார்த்தார்...
'ஓ..வாட் எ சர்ப்பிறைஸ்...
இற்ஸ் நோர்மல்...
ஐ கான்ட்ற் பிலீவ்..'..

'சித்திரா....அவங்க பிளட் ரெஸ்ட் றிப்போட்டை
எடுத்திட்டு வாங்க றூமுக்கு"..என்று கூறிவிட்டு..

"உண்மையில் நீங்கள் அதிர்ஷ்டம் உள்ளவர்...
உங்கள் பிள்ளை மறுபிறவி பெற்று வந்திருக்கிறா!
நீங்கள் இனி எதுக்கும் பயப்படத் தேவையில்லை."..

"நித்தியா! உங்கள் அப்பாவோடு பேசிக்கொண்டிருங்க...
சாப்பிட ஏதும் வேண்டுமா..
கோப்பி ரீ எதுவேணுமென்றாலும் சொல்லுங்க...
நான் அனுப்பிவைக்க ஏற்பாடு செய்கிறேன்..
தைரியமாய் இருங்க."..
என்று ஆறுதல் கூறியபடி...

"சித்திரா! அவங்க என்ன கேட்கிறாங்களோ கொடுங்க..
அவங்க அப்பாவுக்கும் கேட்டு வாங்கிக் கொடுங்க"...
என்று கூறிக்கொண்டே...

தொலைபேசியை எடுத்து
வேகமாக இலக்கங்களை சுழட்டினார்...

சற்று நேரத்துக்கெல்லாம் மற்றைய இரு டாக்டர்களும்
வேகமாக அறைக்குள் வந்திருந்தார்கள்!

"வாட் எ சர்ப்பிறைஸ்...அண்பிலீவ்வபிள்!
வாட் டூ யூ திங் மிஸ்ற்ர காண்டீபன்!
சம்திங் எச்செப்ஸ்ஸன் ஓவர் அஸ்!"

'நேரமும் கணித்து நாம் எடுத்த முடிவு எப்படி..
இயற்கையின் நியதியா..இல்லை....
இறைவன் என்றொரு சக்திபற்றிப்
பேசுகிறார்களே அதுவா."...

'எதுவாய் இருந்தாலும் நித்தியா பிழைத்துவிட்டாள்...
நீண்டகாலமாக முற்றிய நிலையில் இருந்த ஒரு
கொடிய வியாதியில் இருந்து...
அவள் மீண்டுவிட்டாள்.'.
என்றுதான் சொல்லவேண்டும்...

யாரிடமும் சொல்லாமலே...
அவளாலே உணரப்பட முடியாத
வியாதியில் இருந்து அவள் மீண்டுவிட்டாள்...
என்பதுமட்டும் நிஜமாகியது!

காண்டீபனுக்கு புரியமுடியாத ஒரு புதிராகவே
நித்தியா காணப்பட்டாள்!
ஏதோ ஒன்று அவனையும் மீறி அவளோடு
'பேசு! பேசு!' என்றது!

மற்றைய டாக்டர்கள் விடைபெற்றுச் சென்றவுடன்
'நித்தியா இப்போ எப்படி இருக்கிறாள்'
என்று பார்ப்பதற்குச் சென்றுகொண்டிருந்தவனை....

வாசலில் நின்றுகொண்டிருந்த வஸந்த் மறித்துக்கொண்டான்..

"டாக்டர் இங்கை நித்தியா என்று ஒரு பேஸன்ட்ற்."..
என்று இழுத்தான்!...
"யேஸ் கமோன்! என்று கூட்டிச்செல்கையில்...

'இவன் யாரப்பா இந்த நேரத்தில்...
யாராவது உறவுக்காரனாய் இருப்பானோ...
எதுவாக இருந்தாலும் இருந்திட்டுப்போகட்டுமே! உனக்கென்ன!'
என்றது அவனது உள்மனம்!

சட்டென்று 'ச் சா...அப்படி ஏதும் இருக்கக்கூடாது'...
என்று மனம் ஏதோ ஒன்றுக்காக அவஸ்தைப்பட்டது!
சட்டென்று ஏதோ நினைத்தவன்!

'நீங்க இங்கை இருங்க...
நான் அவங்களைப்பார்த்திட்டு வந்து
உங்களைக் கூப்பிடுகிறேனே..ப்பிளீஸ!';
என்று கூறிவிட்டு..
அவனுடைய பதிலை எதிர்பாராமலே
வேகவேகமாக உள்நுழைந்தான்...

நித்தியா படுக்கையில் சற்று
சாய்ந்தபடி விட்டத்தைப்பார்த்தபடி
ஏதோ யோசனையில் இருப்பதைக்கண்டான்!

"ஹாய் நித்தியா! எப்படி இருக்கிறீங்க!
ஏதாவது சாப்பிட்டீங்களா!" என்று
அவள் கையைப்பிடித்து
பள்ஸ்ஸை பார்த்தான்! நோர்மல்....

" நீங்கள் ....
நீங்கள்...உண்மையில் ஆச்சரியமாக இருக்கிறது நித்தியா...
நீங்கள் பிழைத்துக்கொண்டது.
.எங்கள் எல்லோருக்கும் ஆச்சரியம்தான்..
உங்களை அந்தநோய் முற்றாகவே பற்றிப்பிடித்து முற்றியிருந்ததை
நம்மால் பார்க்கக்கூடியதாய் இருந்தது!ஆனால்"....

"ஆமா! உங்களுக்குக் கடவுள்
நம்பிக்கை எல்லாம் இருக்கிறதா!"
என்று அவள் கண்களை ஆழமாக
ஊடுருவிப்பார்த்தவண்ணம் கேட்டான்!

அந்தக்கண்களில் ஏதோ ஒரு காந்தவிசையீர்ப்பு
அவன் இதயத்துள் ஏதேதோ பேசியது...

அந்தப்பார்வை அவளுக்குள்ளும்
ஓர் மின்னலை ஏற்படுத்தியதும் உண்மைதான்!
என்பதை அந்தக்கணம் அவள்மனம் உணர்ந்தாலும் ...

சட்டென்று நிதானத்துக்கு வந்தவளாய்....

"ஆமாம்...எனக்கு அம்மா கிடையாது!
சின்னவயசில் இருந்து அப்பாதான் எல்லாம்...
அவருக்கும் கடவுள் நம்பிக்கை நிறையவுண்டு!
எனக்கும் நிறையவே உண்டு!..
ஏன் கேட்கிறீங்க டாக்டர்" என்றாள் அவள்!..

"உண்மையில் எனக்கு அவ்வளவாக
கடவுள் என்று ஒருவர் இருப்பதே
போலியானது! என்றே...

உங்களுடைய இந்தநிலை
மாற்றம்வரும்வரை இருந்தது உண்மைதான்...
பேஸன்ற்ஸை நம்பிக்கை ஊட்டுவதற்காக
அவ்வப்போது அவர்களைத் திருப்திப்படுத்துவதற்காக
ஆறுதலுக்காக கூறுவதுண்டு...

ஆனால்..இப்போது......
அந்த நிலையையே..
அடியோடு சாய்த்துவிட்டீர்கள் நீங்கள் நித்தியா!"
என்றான் அவன்...

"என்னவோ தெரியலை!
உங்களோடு நிறையப் பேசவேண்டும்போலிருக்கிறது....
எனிவே....
உங்களைப்பார்க்க யாரோ வஸந்த்
என்று ஒருவர் வாசலில் காத்துக்கொண்டிருக்கிறார்....
அவரை அனுப்பிவைக்கட்டுமா நித்தியா"..என்றான்.

"வஸந்த்த்..............
வேண்டாம் டாக்டர்...
அப்புறமாய்ப் பார்க்கலாம் அவரை...
ஏதாவது சொல்லி அவரை வெளியில் அனுப்பிவிடுங்கள்"
என்றாள் அவள்!

"அவள் அப்படித்தான்" ("வளருவாள்!")

அன்புடன்
ஆதித்ததாஸன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக